வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்: டிச., 2,3 தேதிகளில் கனமழை: தென் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ..

மத்திய தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறும் என இந்தியவானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 2,3-ந்தேதி தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது.