வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம்..

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இன்று பாளையங்கோட்டையில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை, அம்பாசமுத்திரம், செங்கல்பட்டில் 4 செ.மீ மழை பெய்தது. சிதம்பரம், கொடுமுடி, நான்குனேரி, அரூர், வந்தவாசியில் 3செ.மீ மழை  பெய்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தில் தென் மாவட்டங்கள்,  புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.