வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ..

மத்திய தெற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும்

இதன்காரணமாக வரும் 13 ஆம் தேதி தென் தமிழகத்தில் பரவலாகவும், 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.