வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…

வடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடமாநிலங்கள் கிழக்கு மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் எனவும் தென்மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.