பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகள் : காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்…

பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ. 1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக (TANFINET) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை முத்தாலகுறிச்சியில் திட்டத்துக்காக கண்ணாடிஇழை கம்பி வடம் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ரூ.1,627.83 கோடி மதிப்பில் 12,525 கிராம ஊராட்சிகளில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.