கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்..

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்து இரவு பகல் பாராமல் பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் பலவகையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ல்படும் மருத்துவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது மிக வேதனைக்குறிய செய்தியாகும்.

கொரோனா தொற்றால் இறந்த மருத்துவரை நல்லடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது. மருத்துவர்கள் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மருத்துவரை நல்லடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிதத்தைக் கண்டிக்கும் வகையில் அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்