காவிரியில் வெள்ளப் பெருக்கு : மேட்டூர் – எடப்பாடி சாலை 3வது நாளாக துண்டிப்பு..


கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன பெய்து வரும் மழையால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளிலிருந்து காவிரிக்கு அதிகப்படியான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து நடப்பாண்டில் 2வது முறையாக அணை நிரம்பியது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.70 லட்சம் கனஅடியாக உள்ளது.

அதிகளவு நீர் வெளியேறுவதால், மேட்டூர் -எடப்பாடி சாலை 3வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது.