காவிரி தீர்ப்பில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக மத்திய அரசு முடிவு..


உச்சநீதிமன்றம் கடந்த மாதம் காவிரி வழக்கில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அறிவுறித்தியது. அந்த 6 வாரா காலம் வரும் 29-ந்தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மத்திய அரசு தற்போது காவிரி வழக்கில் விளக்கம் கோரி மனுத் தாக்கல் செய்யவிருப்பதாக முடிவு செய்துள்ளது. தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள செயல்திட்டம் என்ன என்பதை விளக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை மத்திய அரசு கால தாமதம் ஆவது உறுதியாகிவிட்டது.