சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று (டிச.17) வெளியிட்டுள்ளது.

அதில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2020 பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அனைத்து பாடப்பிரிவுகளுக்கான தேர்வு தேதிகளையும் வெளியிட்டுள்ளது. 110 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள்

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், 19 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிறப்கல் 12.30 மணி வரையும், 8 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது.

பிப்ரவரி 15 முதல் 29 ஆம் தேதி வரை தொழிற்கல்வி சார்ந்த பாடங்களுக்கான பொதுத்தேர்வும், அதனைத்தொடர்ந்து, இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிதம், கணக்கு பதிவியல் ஆகிய முக்கிய பாடங்களுக்கான தேர்வு 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வுகளின்போது தேர்வு அறையில் காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படுகிறது. விடைத்தாளின் முதல் பக்கத்தில் பெயர், பதிவு எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்புவதற்காக 10.15 மணி வரை 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படுகிறது. வினாத்தாளை வாசிப்பதற்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது.

பின்னர் 10.30 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. பிற்பகல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

செய்முறை தேர்வுகள் 2020 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதேபோன்று சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். 10.15 மணிக்கு 10.30 மணிக்கு தேர்வுகல் தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

தேர்வு முடிவுகள் மே அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான விவரங்களை அறிய www.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.