மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..


உச்சநீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்துவதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புதுச்சேரி அரசு சார்பில் கொறடா அனந்தராமன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கும் வரும் 9-ந்தேதி தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.