பரப்புரை மேடையில் நிதின் கட்காரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

மராட்டிய மாநிலம் ஷீரடியில் சிவசேனா வேட்பாளர் சதாசிவ லோக்ஹந்தேவை ஆதரித்து மத்திய நிதி மந்திரி நிதின் கட்காரி பரப்புரை மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

உரையை முடித்த பின்னர் அவர் தன் இருக்கையை நோக்கி நடந்து சென்ற போது திடீரென மயக்கம் அடைந்து கிழே விழுந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.

இதனையடுத்து சிறிது நேரம் கழித்து எழுந்த நிதின் கட்காரி பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் தன் காருக்குள் சென்று அமர்ந்தார்.

பரப்புரை மேடையில் நிதின் கட்காரி மயக்கம் அடைந்த சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.