சென்னையில் 46-ஆவது புத்தகத் திருவிழா 2023: இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்….

சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 46ஆவது புத்தகக் காட்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்குத் தொடங்கிவைக்கிறார்.

இதுவரை அதிகபட்சமாக 800 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சியில், இந்த ஆண்டு முதல் முறையாகச் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியும் நடைபெறவிருக்கிறது.
இன்று தொடங்கும் புத்தக கண்காட்சி வரும் ஜனவரி.22, வரை நடைபெறும் எனத் தெரிவிக்கிப்பட்டுள்ளது.