கோயில்களில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

கோயில்களில் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி தாக்கல் செய்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்க வந்தது. மல்லாங்கோட்டை கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.. இக்கிராமத்தில் அருள்மிகு சந்தி வீரன் சாமி கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இக் கோயிலுக்கு தக்கார்நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்து அறநிலையக் கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சிலர் சக்தி வீரன் கோயிலில் தங்களுக்கு முதல் மரிாதை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு நடைபெற உள்ள திருவிழாவில் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் திருவிழாவின் போது இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியி சமூகத்தினரை கோயில் உள்ளே அனுமதிப்பதில்லை எனவே அனை்து சமூத்தினரையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என வழக்கில் தெரிவித்திருந்தார்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தனிப்பட்ட எந்த நபருக்கும் திருவிழாவில் முதல்மரியாதை வழங்கக் கூடாது. அனைத்து சமூக மக்களும் திருவிழாவில் வழிபடுவதை இந்து அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். இதனை அருள்மிகு சந்தி வீரன் சாமி கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.