கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏற்கெனவே அமைச்சர், அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்ககள் எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம், படுகாயமடைந்தோருக்கு தலா 1 லட்சம், காயமடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றார்