முதல்வரை சந்திக்க அனுமதி அளிக்காததால்,முதல்வர் வீடு அருகே 2 பெண்கள் தற்கொலை முயற்சி!….

சென்னையில் முதல்வர் பழனிசாமி வீடு முன் 2 பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள்(65), ஜெய மீனாம்பிகை(31) தற்கொலைக்கு முயன்றனர்.

கிருஷ்ணம்மாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தும், மீனாம்பிகை கழுத்தை இறுக்கியும் தற்கொலைக்கு முயன்றனர்.

தற்கொலைக்கு முயன்ற 2 பெண்களும் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.