தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:

தமிழகத்தில் மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,636-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,203 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,230-ஆக அதிகரித்துள்ளது.
இன்று 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் . தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,116-ஆக அதிகரித்துள்ளது.

latest tamil news

 

latest tamil news