தமிழகத்தில் மேலும் 1,982 பேருக்கு கரோனா தொற்று : தமிழக சுகாதாரத்துறை அறிக்கை..

தமிழகத்தில் இன்று (ஜூன் 11) ஒரே நாளில் மட்டும் 1,962 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, .
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40698ஆக உயர்ந்துள்ளது.இன்று 18 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இன்று மேலும் 1982 , பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40698ஆக உயர்ந்துள்ளது.இன்று 18 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆகவும் அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1342பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 22047ஆக உயர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 18,231 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,73,906 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 1,449 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது.