“சி.ஆர்.பி.எஃப் சீருடைகளில் பாஜக தொண்டர்கள் குவிக்கப்பட்டார்களா?” : சந்தேகம் எழுப்பும் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மக்களவைத் தேர்தலுக்காக, சிஆர்பிஎப் சீருடைகளில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களை மத்திய அரசு அனுப்பியிருக்கக் கூடும் என அம்மாநில முதல்வர் மம்தா சந்தேகம் எழுப்பியுள்ளார்.

“இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளுக்காக அதிக அளவிலான சிஆர்பிஎப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனை பார்க்கும்போது, சிஆர்பிஎப் சீருடைகளில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களையே மத்திய அரசு அனுப்பியிருக்கும் என சந்தேகம் எழுகிறது.

தேர்தலில் வெற்றி பெற எந்த நிலைக்கும் பாஜக இறங்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்