பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்பு …

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் தனது பணிகளை தொடங்கினார்.

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் யெசோ நாயக்((Yesso Naik )) உள்ளிட்டோர் ராஜ்நாத் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக ராஜ்நாத்சிங் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

அதேபோன்று மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா  முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

உள்துறை இணை அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.