“தேவகோட்டை காதல்” சினிமாபட கதாநாயகன் செயின் அறுப்பு வழக்கில் கைது…

“தேவகோட்டை காதல்” சினிமாபட கதாநாயகன் செயின் அறுப்பு வழக்கில் காரைக்குடி குற்றப்பரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

“தேவகோட்டை காதல்” என்ற சினிமாபட இயக்குனரும்,கதாநாயகனுமான சீனிவாசன் செயின் அறுப்பு வழக்கில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
காரைக்குடி செஞ்சையிலிருந்து அரியக்குடி செல்லும் சாலையில் அதிகாலை 5.30 மணியளவில் நடைபயிற்சி செய்து வந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்தபெண் செயின் அறுப்பு வழக்கில் கண்காணிப்பு கேமிரா மூலம் திருடனை போலீசார் கைது செய்தனர். அவனை விசாரித்தபோது பல விசயங்கள் போலீசாரை அதிர்ச்சியடையச் செய்தது.

பிடிபட்ட திருடன் “தேவகோட்டை காதல்” என்ற திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகனாக நடித்துள்ளான்,தேவகோட்டை காதல்,குப்பைக்காரன் படங்களில் நடித்துள்ளான். இவனது சொந்த ஊர் தேவகோட்டை கைலாசநாதபுரம்.

“தேவகோட்டை காதல்” சினிமாபட கதாநாயகன் செயின் அறுப்பு வழக்கில் காரைக்குடி குற்றப்பரிவு போலீசார் கைது செய்யப்பட்ட சீனிவாசன்


தேவகோட்டையில் பேருந்து நிலையம் பின்புறம் 6 வருடங்களுக்கு முன் தீபம் ஸ்டுடியோ நடத்தி வந்துள்ளான். ஸ்டுடியோ தீப்பற்றி எரிந்துள்ளது. இவன் மேல் நீலப் (புளுபிலிம்) படம் எடுத்த வழக்கும் உள்ளது. காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் தற்போது வாடகைக்கு வீடு எடுத்து சினிமா டிஸ்கஷன் நடத்திவருவதாக தெரியவந்துள்ளது.

இவனுடன் சம்பந்தப்படுத்தப்பட்ட தொண்டியைச் சேர்ந்த துணை நடிகர் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான். அவனுக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொருவனைத் தேடி போலீசார் சென்னை சென்றுள்ளனர்.இந்த வழக்கை காரைக்குடி சரக காவல் துணைக்கண்காணிப்பார் அருண் தலைமையில் காரைக்குடி குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர்கள் பார்த்திபன், தவமணி மற்றும் போலீசார் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.

காரைக்குடி நகர் முழுவதும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் போலீசாரால் விரைவில் திருடனைப் பிடிக்க முடிந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

செய்தி &படங்கள்
சிங்தேவ்