திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று கூடுகிறது..

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்து முடிவெடுக்க திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச்செயலாளர்கள் உட்பட 26 உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிரச்சார யுக்திகள், கூட்டணி நிலைப்பாடு குறித்த விவரங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதான கட்சிகள் எல்லாம் முன்னதாகவே தேர்தல் பணிகளை துவங்கிவிட்ட நிலையில் திமுகவின் இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.