குடிநீர் வழங்க கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..

தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை நகரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. தண்ணீருக்காக சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் குடிநீர் வழங்க கோரி திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் தராத அரசை கண்டித்து திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெறும் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

வில்லிவாக்கம் சிட்கோ நகரில் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றுள்ளனர்.

இதேபோல தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் ஏ.வ.வேலு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே நடைபெறும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.