விவசாயிகளின் பேரணிக்கு திமுக ஆதரவு : மு.க.ஸ்டாலின் அறிக்கை..

கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் பிஏபி விவசாயிகளின் எழுச்சிப் பேரணிக்கு திமுக ஆதரவு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் பிஏபி விவசாயிகளின் எழுச்சிப் பேரணிக்கு திமுக ஆதரவு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் நாளை நடக்கும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளனதாவது;

“ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்றவும் – நீராறில் இருந்து கேரளாவிற்கு திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தக் கோரியும் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் நடத்தும் எழுச்சிப் பேரணிக்கு கழகத்தின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் (பி.ஏ.பி) கீழ் தமிழக விவசாயிகளின் கனவுத் திட்டமான “ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை” நிறைவேற்றவும்,

“அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நீராறில் இருந்து கேரளாவிற்கு திறந்து விடப்பட்டும் தண்ணீரை நீறுத்தக் கோரியும்” பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் சார்பில் திருப்பூரில் 15.10.2018 அன்று நடைபெறவிருக்கும்

“மாபெரும் கவன ஈர்ப்பு எழுச்சிப் பேரணிக்கு” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்தப் பேரணியில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி,

09.11.1958 ஆம் வருடத்திலிருந்து செயல்படுத்தும் வகையில், 29.05.1970 அன்று போடப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பின்தேதியிட்ட ஒப்பந்தம் பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல நதிகளை இணைக்கும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய ஆனைமலையாறு திட்டத்தினால், தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்.

அது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வுரிமைக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.