பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூர் அப்துல்லாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்டம்பர் 15ல் பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில்

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுவதாகவும், இந்த மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருவதாகவும்,

அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தில் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மனு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் இன்று தாக்கல் செய்யப்பட்டதாகவும்,

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.