அரியலுார் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் மாயம்..

அரியலுார் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கீழராமநல்லுாரிலிருந்து மேலராமநல்லுாருக்கு கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் படகில் பயணம் செய்தனர்.

படகு கவிழ்ந்து விபத்திற்கள்ளானதில் 10 பேரைக் காணவில்லை என்கின்றனர்.

10 பேர் நடுத்திட்டில் ஒதுங்கி நிற்கின்றனர். 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணமல் போனவர்களை தேடி வருகின்றனர்