பிப்., 1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி: விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு..

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.
வரும் 29-ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் பேரணியை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.