தெலுங்கானா ஸ்ரீசைலம் அருகே நீர்மின் நிலையத்தில் தீ விபத்து: 9 பேர் சிக்கி தவிப்பு!..

Fire broke out at Left Bank Power House in Srisailam, in Telangana side, late last night. Fire engine from Atmakur Fire Station, Kurnool deployed. Ten people rescued, of which 6 are under treatment at a hospital in Srisailam. Nine people still feared trapped. More details awaited

தெலுங்கானாவில் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள ஸ்ரீசைலம் அருகே உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் நீர்மின் நிலைய ஆலைக்குள் உள்ள மின் நிலையங்களில் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின் நிலையத்திற்குள் 9 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானாவில் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள ஸ்ரீசைலம் அருகே உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கியிருந்த 10 பேரை மீட்டுள்ளனர்.

மேலும், 9 பேர் மின்நிலையத்தின் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடம் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்கட்ட தகவல்களின்படி, ஸ்ரீசைலம் அணையின் இடதுபக்க கரையில் பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.