வெள்ளபாதிப்பு: தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி,குஜராத்துக்கு ஒரு நீதியா? :பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்பி கேள்வி….

பெருவெள்ளபாதிப்பு தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி,
குஜராத்துக்கு ஒரு நீதியா? என பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்பி கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது டிவிட் பகுதியில் தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை.குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1000 கோடி அறிவிக்கிறார் பிரதமர்.
தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எட்டிப் பார்க்காதது ஏன்? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி,குஜராத்துக்கு ஒரு நீதியா?..என பதிவிட்டுள்ளார்.