முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு ஆதரவாக பேரன் கோட்டையூர்,பாரிநகரில் பரப்புரை…

திருப்பத்துார் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கரு.பெரியகருப்பன் சாக்கோட்டை மேற்கு வட்டாரப்பகுதியான, பாரிநகரில் தனது பரப்புரையைத் தொடங்கினார்.


அப்போது அவர் மக்களுக்கு தேவையான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினார். மக்கள் விரோத அரசு என்றால் தவறில்லை, பாரிநகருககு தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தார்.

அவருடன் அவரது பேரன் அர்ஜுன் தாத்தா பெரியகருப்பனுக்கு வாக்கு சேகரித்தார்.அப்போது நல்லாயிருக்கீங்கலா… என்று சத்தமாக கேட்டார் இன்னும் சத்தமாக என்று மக்களை ஆரம்பத்திலேயே அசத்தினார்.

எனது தாத்தா பெரிய கருப்பன் சொன்னதை செய்வார் சொல்லாததையும் செய்வார் என்று பேசி தாத்தாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.


பாரி நகரில் தொடங்கி ஸ்ரீராம் நகர் கோட்டையூர், பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் கோட்டையூர் நாட்டார்களிடம் ஆதரவு திரட்டினார். அதுபோல் கோட்டையூர் நகரத்தாரிடம் ஆதரவு கோரினார்

பரப்புரையை சாக்கோட்டை பகுதி பொறுப்பாளர் கேஆர்எஸ் ஆனந்தன், ஒருங்கிணைத்தார்.

செய்தி & படங்கள்
சிங் தேவ்