விமானியாக விரும்பும் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராகுல் ..

ஹெலிகாப்டரில் விமானிகள் அமரும் விமானி அறையைக் காண விரும்பிய ஒன்பது வயது சிறுவனின் ஆசையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிறைவேற்றி உள்ளார்.

டந்த சனிக்கிழமை அன்று கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின்போது தேநீர்க் கடை ஒன்றில் அத்வைத் என்ற சிறுவனை ராகுல் சந்திக்க நேரிட்டது.

தன்னிடம் இந்தியிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசிய சிறுவனிடம், எதிர்கால லட்சியம் குறித்து கேட்டார் ராகுல். அதற்கு, விமானியாக விரும்புவதாக கூறிய சிறுவன் அத்வைத், தான் இதுவரை ஹெலிகாப்டரை நெருங்கிச் சென்று பார்த்ததில்லை என்றான்.

இதையடுத்து கோழிக்கோடு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரைப் பார்வையிட அத்வைத்தை அழைத்தார் ராகுல். பின்னர் விமானி அறையில் அச்சிறுவனை அமரவைத்து அதன் பெண் விமானியும் ராகுலும் சேர்ந்து தொழில்நுட்பத் தகவல்களை விளக்கினர்.