முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்..

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக் குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது மகன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

84 வயதான முகர்ஜி முன்னதாக ஆகஸ்ட்10 அன்று மூளை அறுவை சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரது உடல் நிலையில் பெரிய அளவு முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லையென மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவரது மறைவை அவரது மகன் உறுதி செய்துள்ளார்.