திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை..

கரோனா பொது முடக்கத்தால் தொடர்ந்து 6-வது மாதமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ,’ மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில்,’

மக்கள் நலன் கருதி பெளர்ணமி நாளான 1 ,2 ஆகிய நாட்களில் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே பக்தர்கள் அனைவரும் கிரிவலம் செல்வதற்கு வருகைப்புரிய வேண்டாம், ‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.