பாலியல் வழக்கிலிருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை..

பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு, கோவாவில் உள்ள விடுதியில் நடைபெற்ற, கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற சக பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ‘தெஹல்கா’ பத்திரிகையின் நிறுவனரும் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியருமான தருண் தேஜ்பால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் அதே ஆண்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் 2014-ல் இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி தருண் தேஜ்பால் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், இந்த முறையீட்டை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கோவா நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதன்படி, இந்த வழக்கு விசாரணை கோவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இருந்து தருண் தேஜ்பாலை விடுவித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.