தமிழகம் முழுவதும் “ஊராட்சி சபைக் கூட்டம்” : திமுக அறிவிப்பு..

தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.கிராம சபை ஊராட்சி கூட்டம் குறித்த திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்

பாசிச பா.ஜ.க அரசுக்கும், அடிமை அ.தி.மு.க அரசுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, ஊராட்சி தோறும் மக்களைச் சந்திக்கிறது கழகம்!

ஜனவரி 03 முதல் தமிழகத்தின் 12, 617 ஊராட்சிகளிலும் நடைபெறவிருக்கும் கழகத்தின் ‘ஊராட்சி சபைக் கூட்டங்களில்’ தலைமை கழக பிரதிநிதிகள், பேச்சாளர்கள் பங்கேற்பர்.

ஜனவரி 3-ந்தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி சபைக் கூட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

ஈரோட்டில் திமுக பொருளாளர் துரைமுருகனும்,காஞ்சிபுரத்தில் கழக முதன்மை செயலாளர் டிஆர்.பாலு தொடங்கி வைக்கிறார்.