ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற ராகுல், பிரியங்கா கைது..

உத்திர பிரதேசத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கிராமத்துக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற வாகனங்களை உ.பி. போலீஸ் தடுத்து நிறுத்தியதால் நடந்து செல்கின்றனர்.
கத்ராஸ் கிராமத்துக்கு செல்லும் ராகுல், பிரியங்காவுடன் ஏராளமான தொண்டர்களும் ஊர்வலமாக போகின்றனர்.

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியுடன் ஊர்வலமாக செல்லும் தொண்டர்கள் மீது உத்தரப்பிரதேச போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

ராகுல், பிரியங்காவுடன் தொண்டர்களை செல்லவிடாமல் தடுக்க உ.பி. போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற ராகுல், பிரியங்கா இரவரையும் நோய் தொற்று தடுப்பு சட்டத்தில் கைது செய்தள்ளதாக உ.பி போலீசார் தெரிவித்தள்ளனர்.

போலீசார் ராகுலை கீழே தள்ளி லத்தி கம்பால் அடித்ததாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.