கனமழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் பிரதமர் மோடியின் திட்டம் ரத்து..


கேரளாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை கொட்டிதீர்தத்து வருகிறது.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவே நிலை குலைந்து போய்வுள்ளது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய இன்று காலை பிரதமர் மோடி கொச்சி வந்தடைந்தார்.

இந்நிலையில் கொச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி ரத்து செய்தார்.

எர்ணாகுளம், பத்தினம்திட்டா, ஆலப்புழை ஆகிய இடங்களை பிரதமர் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.