மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இன்று காலை திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். எனினும், வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். சமீபத்தில் செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்வுகளை பங்கேற்காமல் தவிர்த்து, தனது வீட்டிலேயே தேசியக்கொடி ஏற்றினார்.
இந்த நிலையில், இன்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு உள்ளிட்ட சில காரணங்களுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.