இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.4 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்தை கடந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் புதிதாக 14,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.

அதில், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 014 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 48 ஆயிரத்து 190 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 312 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 011 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.