நமது ராணுவ வீரர்களை கொன்ற சீனா, பிரதமர் மோடியை புகழ்வது ஏன்? : ராகுல் காந்தி கேள்வி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, சீனா எதற்காக புகழ்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

லடாக் எல்லை பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதேநேரம், இந்திய நிலப்பகுதியில் ஒரு இன்ச் கூட சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்

அப்படியானால் எதற்காக இந்த மோதல் நடைபெற்றது, எந்த இடத்தில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

நேற்று ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் நரேந்திர மோடி சரணடைந்து விட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.