இந்தியாவில் ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிக்கை…..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,520 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை…

: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது.

அதில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 798 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.