சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அறிவிப்பு..

ஐநா.சபையால் உருவாக்கப்பட்ட global arms treaty எனப்படும் சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தின்படி ஏவுகணைகள் மற்றும் இலகு ரக ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாது.ஆயுத வர்த்தகத்தால் பல்வேறு வன்முறைகள் பிரச்சினைகள் ஏற்படுவதாக இந்த ஒப்பந்தம் கூறுகிறது.

ஆனால் ரஷ்யா, சிரியா, வடகொரியா போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக நிராகரித்துள்ளன.

கடந்த 2013ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் அதிபர் ஒபாமா கையெழுத்திட்டார். ஆனால் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

உள்நாட்டில் துப்பாக்கி வைத்திருக்க சர்வதேச விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்காவின் தேசிய ரைபிள் அசோசியேசன் கூறுகிறது.

இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும் அமெரிக்கா கூறுகிறது.