ஈரானில் சரக்கு விமானம் விபத்து :10 பேர் உயிரிழப்பு…

ஈரானில் சரக்கு விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் இராணுவத்திற்கு சொந்தமான ’போயிங் 707 கீரீய்ஸ்’ சரக்கு விமானம் ஒன்று வழக்கம் போல் சேவையில் ஈடுபட்டிருந்தது.

அப்போது, மோசமான வானிலை காரணமாக விமானம் அதன் வழக்கமான பாதையிலிருந்து விலகி நடுவானிலேயே தடுமாறியது.

பின்னர், தரையில் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்தில் சிக்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு வீரர்கள் அவசர கால பணியில் ஈடுபட்டத் தொடங்கினர்.

இவ்விபத்தில் சிக்கி 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.