ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் : அதிமுக சார்பில் அமைதி பேரணி..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

இந்நினைவு நாளையொட்டி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்..

முன்னதாக சென்னை அண்ணா சிலை அருகே தொடங்கி வாலாஜா சாலை வழியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி நடத்துகின்றனர்.

இந்த பேரணியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.