காரைக்குடியில் உயர்மட்ட கோபுர மின்விளக்கு : நகர் மன்றத் தலைவர் திறந்து வைத்தார்..

காரைக்குடி திலகர் நகர் 8 முனை சந்திப்பு மற்றும் சூடாமணி நகர் 5 முனை சந்திப்பிலும் உயர்மட்ட கோபுர மின்விளக்கு (எல்இடி) நகராட்சி பொது நிதி சார்பில் தலா ரூ.7 லட்சம் அளவில் அமைக்கப்பட்டது.

இந்த உயர்மட்ட கோபுர மின்விளக்கை இன்று மாலை (26.08.2022) 5 மணியளவில் காரைக்குடி நகர்மன்றதலைவர் திரு.சே.முத்துத்துரை அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

விழாவில் நகர்மன்றத் துணைத் தலைவர் திரு.நா.குணசேகரன்,நகராட்சி ஆணையாளர் திரு. லெட்சுமணன், நகராட்சி உதவி பொறியாளர் திருமதி சீமா நகர்மன்ற உறுப்பினர்கள் சாந்தி நாச்சியப்பன் தெய்வானை இளமாறன் மங்கையர்க்கரசி அடைக்கலம் கலா காசிநாதன் ஹேமலதா செந்தில் அஞ்சலிதேவி ராதா பாண்டியராஜன் தனம் சிங்கமுத்து ராணி சேட்டு துரை நாகராஜன் கார்த்திகேயன் முகமது சித்திக் ஹரிதாஸ் விஷ்ணு பெருமாள் ராம்குமார் ரத்தினம், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்