காரைக்குடியில் ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்…

விலைவாசி உயர்வு,பெருகும் வேலைவாய்ப்பின்மை,ஜிஎஸ்டி வரி என ஒன்றிய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து காங்கிரஸார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி ஐந்து விளக்கு அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசு விதித்துள்ள அத்தியாவசியப் பொருள்களுக்கான விலை உயர்வு,நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை,ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி தலைமை தாங்கினார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி. இந்திய மக்கள் கரோனா பேரிடர் காலத்தில் வலியோடு தாங்கி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும்சூழலில் ஒன்றிய அரசு பெட்ரோல்.டீசல்.சமையல் காஸ் விலைகளை உயர்த்தியது. தற்போது அதற்கும் ஒரு படி மேலே போய் அரிசி, பருப்பு, எண்ணெய், பால், தயிர், மோர், பென்சில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது.. பெரு முதலாளிகளுக்கு மானியம்,வரிச்சலுகை அளித்து ஏழை எளிய மக்களின் மீது தாங்க முடியாத வரிகளை விதித்து வருகிறது ஒன்றிய அரசு.
2004-2014-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போற்கு கூட்டணி ஆட்சியில் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நேரத்திலம் விலைவாசியை கட்டுக்குள் நிறுத்தி பொருளாதார வளர்ச்சியை நிலையாக வைத்து இந்திய ம்களின் நலனை பாதுகாத்தார்கள்.
ஆனால் தற்போதைய பாஜக ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்துமே மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிற வகையில் அமைந்துள்ளது. வரிகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விலைவாசி உயர்வை திரும்ப பெறவேண்டும். அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிகளை நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறப்பினர் சுந்தரம், முன்னாள் மாவட்டத் தலைவர் இராஜரெத்தினம்,நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன்,முன்னாள் நகரத் தலைவர் சிவானந்தம்.மாவட்ட பொருளாளர் பழனியப்பன்,ஒன்றிய கவன்சிலர் கோவிலுார் அழகப்பன்,மாவட்ட செயலாளர் அப்பாவு இராமசாமி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி இமய மடோனா,காரைக்குடி நகர் மன்ற உறுப்பினர்கள் இரெத்தினம்,அமுதா,வட்டாரத் தலைவர்கள் இருதயராஜ்,ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்