கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் : காங்., அமோக வெற்றி…

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே காங்கிரஸ் வெட்பாளர்கள் மன்னிலை வகித்தனர். காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் 3 முறையாக வெற்றிபெற்றுள்ளார்.

தற்போதைய பிற்பகல் நிலவரப்படி காங்கிரஸ் 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் பாஜக 66 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதர இடங்களில் சுயேச்சை முன்னிலை பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடிக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் இந்த வெற்றியை உற்சாக கொண்டாடி வருகின்றனர்.