கேரளா வெள்ள பாதிப்பு : பில்கேட்ஸ் ரூ.4 கோடி நிதியுதவி..


வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பில்கேட்ஸ் ரூ.4¼ கோடி நிதி வழங்கியுள்ளார்.

கேரளாவில் கடுமையான வெள்ளம் பாதிக்க்கப்பட்டு 370 பேருக்கும் அதிகமானனோர் பலியாகினர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மிக அதிகமாக வெள்ளம் பாதித்தது.

இந்நிலையிலங்கு நிவாரண பணிகள் நடக்கிறது. இதில் மாவட்ட நிர்வாகத்தினருடன் யுனிசெப் அமைப்பும் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ், தனது கேட்ஸ் பவுண்டேசன் மூலம் ரூ.4¼ கோடி நிதியாக வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக பில்கேட்சின் அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், ‘கேரளாவின் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

யுனிசெப் இதர தொண்டு நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ள எடுத்துள்ள நடவடிக்கைகள் சுகாதார பணிகளுக்கு நாங்கள் அளித்துள்ள நிதி, மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்‘ என்று கூறப்பட்டு உள்ளது.