தமிழக மக்கள் குறித்து கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார் : அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டிவிட்டரில் தமிழக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் கிரண்பேடிடியின் பதிவு குறித்து மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசினார்.

இது குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  தமிழக மக்கள் குறித்து கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்துவிட்டார் என  கூறியுள்ளார்.

கிரண்பேடி கருத்து தெரிவித்தபோது அவரை தொடர்பு கொண்டு மத்தியஅரசு மூலம் விளக்கம் கேட்கப்பட்டது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.