“கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி அவமதிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இழி செயலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட் பக்கததில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவு..
என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.

அதனால் அவர் பெரியார்!

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!
என பதிவிட்டுள்ளார்