“கோவை, மதுரையில் மெட்ரோ” இரயில் திட்டம் : பேரவையில் நிதியமைச்சர் தகவல்..

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் போது
கோவை மெட்ரோ இரயில் திட்ட விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது, பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதிபெறுவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுபோல் மதுரை மெட்ரோ இரயில் திட்ட சாத்தியக்கூறு குறித்து அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது வரும் மே மாதத்திற்குள் திட்ட அறிக்கையை எதிர்பாக்கிறோம் என்று தெரிவித்தார்.